Wednesday, 30 January 2013

திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுக்கான குண்டம் அமைக்கும் பணி






















திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுக்கான குண்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணைமிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு. காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பேராற்றல் மிக்க தென்கயிலாயமாகிய அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள புனிதமிக்க திருவையாறு திருத்தலம்.

சோழவளநாட்டின் காவிரி தென்கரையின் 51ஆவது திருத்தலமாக விளங்குவதும் நால்வராலும் பாடல்பெற்றதும் அப்பருக்கு கயிலைக்காட்சி நல்கியதும் சுந்தரர் சேரமான் பெருமானுக்கு காவிரி வழிவிட்டு காட்சி நல்கியதும் கரிகாலன் ராஜராஜன் இராசேந்திரசோழன் உள்ளிட்டோர் கட்டியதும் சப்தஒலி கேட்கக் கூடியதும் முருகன் வில்லேந்திய வேலனாக இருப்பதும் சுசரிதனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததும் 32ஆவது தருமம் செய்து அம்மை தர்மசம்வர்த்தினியான திருவையாற்றுத் திருத்தலம் 1971க்குப் பிறகு 27.07.2009 திருப்பணி துவங்கப்பெற்று வரும் தை மாதம் 24 & 25 (06.02.2013 & 07.02.2013) வியாழக்கிழமை குடமுழுக்கு நடத்த தருமையாதீனம் 26ஆவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுளம்பற்றியுள்ளார்கள். குடமுழுக்கு விழாவிற்கு முன்னதாக 8 கால யாக சாலை பூசைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் அன்பர்கள் சிவனடியார்கள் தங்கவும் உணவுக்கும் மிக விரைவாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்பர்கள் கலந்துகொண்டு தரிசித்து திருவருளையும் குருவருளையும் பெற்றுத் திகழ்ந்திட விரும்புகின்றோம்.

குந்தி நடந்து குனிந்து ஒரு கை கோல் ஊன்றி
நொந்து இருமி ஏங்கி நுறைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.




No comments:

Post a Comment